இன்று பிறந்த நாள் காணும் என் தமக்கை பூங்கோதை ஆலடி அருணாவிற்கு வாழ்த்து மடல்

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே
சூடாமணியின் உரிமைக் கொடியே
பாடிக் கதைக்கு விகற் கொடியே - நீ
பாடாண் திணையில் ஒரு பெண் கொடியே
பூசாரி குடும்பத்தின் மதியூகி மந்திரியே
பூவை உந்தன் பாசத்தால்
என்றென்றும் எம் உள்ளத்தின் நிரந்தரியே
வனப்பிலே சுந்தரியே
வான் புகழ் உயர் கிரியே
எத்தனை முறை வீழ்ந்தாலும்
பகலவனையே நோக்கிப் பறக்கும்
பீனிக்ஸ் பறவை போல்
வியூகங்கள் அமைத்து எதிர்த்தவரை
நகை முகை காட்டி பகை வென்று
வாகை சூடிடும் வெற்றித் தாரகையே
ஆலடி மண் பெற்றெடுத்த கற்பகத் தருவே
ஆருயிர் பெரிய தந்தையின் உயிர் உறவே
என்னருமை தமக்கையே
என் உளம் கவர்ந்த குந்தவையே
என்றென்றும் நீ எனக்கு முந்தையே- யான்
என்றும் வேண்டுவது
உன் பன் முக சுகத்தையே
சுடர் விடும் சூரியனாய்
சூசகத்தில் சாணக்கியமாய்
வளர் பிறை நிலவாய்
வாழ்வியலில் இலக்குமியாய்
அலை கடல் நிரந்தரமாய்
ஆயுள் பல நூறு பெற்று
வாழ்வாங்கு நீ வாழ்ந்திட
வானுறையும் தெய்வம் அடி தொழுகின்றேன் !
அன்புத் தங்கை
அமுதா அம்மு