என் காதல் - கவிதைப் போட்டி
என்னைத் தொட்டது
அவள் சுவாசமா? இல்லை
அவளது நேசமா?
என் காதலை
அவள் மனத் தோட்டத்தில்
விதைக்கவிட்டேன்.
ஒவ்வொருநாளும் அவளின்
ஓரவிழிப் பார்வையில் - என்
காதல் விதை வளர்கிறதா என
காத்திருந்தேன். - அவளது
சுவாசத்தில் என்காதல் விதை
சுகப் பிரசவம் ஆகுமா என
தவித்தேன். - அவளும் இசைவுத்
தண்ணீரை வார்த்தாளா என
துடித்தேன். - ஒருநாள்
அவளிடமே அணுகிக் கேட்டேன்.
அவள் மௌனம் சாதித்தாள்.
அவளது இந்த மௌனம்
எதை சொல்லுகிறது என
என் மனம் கேள்வியில் சிக்கியது.
என்காதல் அவளிடம் அரும்புமா?
என் மீது அவளது கவனம் திரும்புமா ?
என்னை அவள் ஏற்பாளா?
என்றுமே என்னுடன் இருப்பாளா?
எனக்கு அவள் கிடைப்பாளா?
என்பருவத்தின் கேள்விக்கு
அவள் புருவத்தின் மூலம்
அழகாய் சிரிப்பாளா? இல்லை
ஆத்திரத்தில் முறைப்பாளா?
அவளது மௌனத்தால் எனக்கு
மரண அவஸ்த்தை. - என்காதல்
எங்கே முடியும் என்று
தெரியாமல் தவிக்கின்றேன்.
அவள் விடும் சுவாசத்தில் தான் எங்களின்
அந்தரங்க நேசம் அரவணைத்து செல்லும்.?