மயக்கும் மங்கை
வெள்ளிக் கிழமை
மஞ்சள் சேலை கட்டி
கருங் கூந்தலை
விரித்து விட்டு வந்து
நிற்பாள் என் அத்தை
பெத்த மங்கை..!!
பத்தினி அம்மன்
கோயிலில் அவள்
பக்தியோடு நிற்க
நான் மறைந்து
நின்று பார்ப்பேன்..!!
அம்மனுக்குப்
போட்டியாக அவள்
அழகு இருக்க
அம்மனை விட்டு
நான் அம்மணியைத்
தரிசிப்பேன்..!!
சனிக்கிழமை ஆனதும்
வகுப்புக்கு வருவாள்
குட்டைப் பாவாடை போட்டு
குதி உயர்ந்த சப்பாத்து
மாட்டி மடக்கி சுருட்டி
போட்ட நாகரீகக்
கொண்டையும்
பாப்பாத்தி போல்
இறக்கைச் சட்டையும்
அள்ளிப் பூசிய
உதட்டுச் சாயமும்
தூக்கி மாட்டிய
சுறட்டைத் தோடும்
தோள் தாங்க முடியாத
பேக்கும் கறுப்புக்
கண்ணாடியும் மாட்டி
வருவாள் வீதியிலே
அவள் நடையோ ரம்பா
எடையோ சிம்ரன்
அசைவு ஷகிலா
அவளை நான் உற்று
நோக்கியே படிப்பேன்
பல பாடம் பக்கத்து
தேனீர் கடையில்
மறைந்து நின்று...!!
ஞாயிற்றுக் கிழமை
ஆனதுமே மாட்டி
வருவாள் சிலுவார்
கட்டிக் கொள்வாள்
இடுப்பு பட்டி உடல்
பயிற்சி உடையையுடன்
அவள் முறைத்துப் பார்த்தால்
மின்னல் தெறிக்கும்
கண்ணில் ஜான்சி ராணியைக்
குருவாய்க் கொண்ட குமரி
நடுங்கித்தான் போவேன்
எதார்த்தமாய் நேரில்
சந்தித்தால் சிரிப்பதும்
முறைப்பது போல் இருக்கும்..!!
திங்கட்கிழமை
ஆனால் இரட்டைச்
சடை போட்டு வட்டப்
பொட்டு வைத்து அழகாய்
பாடசாலை சீருடை
அணிந்து வருவாள்
குனிந்த தலை நிமிராமல்..!!!
அவள் முகம் பார்க்க
பல ஆண்கள் துடிப்பார்கள்
அவர்கள் அறியா ரகசியம்
அவளின் சுயரூபம்...!!
மழலைபோல் பேசுவாள்
அன்போடு பழகுவாள்
தோழிகளிடம் ..!!
என்னைக் கண்டவுடன்
வெட்கப்படுவாள்
அப்படி என்று சொல்ல
மாட்டேன் அவள்
கண்ணில் நான் சிக்குவது
மிகவும் குறைவு மறைந்து
ரசிப்பதுதான் என் இயல்வு
மறைந்து மறைந்து
ரசிக்கின்றேன் மறக்க
முடியாத காதலை
வளர்க்கின்றேன்...!!!