பாவம்

அன்றொரு நாள்..
வசந்த மண்டபத்தில்..
அவளுக்கும் அவனுக்கும்
ஏற்பட்டது ஓர் பிணக்கு!

அவன் சொன்னான்..இப்படி!
பெண்ணாய் பிறத்தல் பாவம்..
காரணம் முன் செய்த பாவம் ..!

அவள் பதில் உரைத்தாள்..எப்படி?
அன்பரே..அப்படியென்றால்..
பாவத்தில் பிறந்தவரா நீங்கள்?

வாதம் தொடங்கியது...
பின் முற்றியது..
முடிவில்..அவளை
அரண்மனையை விட்டே
வெளியில் போகச் சொன்னான்..
வயிற்றில் குழந்தையோடு..
அரசி அல்ல அவள்..
அந்தப்புரத்தில் ஒரு ஆசைக் கிளி!
அவ்வளவே!

இதில் எது பாவம்?
..ஆண் பாவம்?
..அகம்பாவம்?
ஐயோ பாவம் ..!
அவனது வாரிசுகள்
நாட்டில் ஏராளம்!
அதனால் பல பெண்களின்
நிலை பரிதாபம்!
நெருப்புக் குழம்பா
தீர்க்கும் அவர் தாகம்?

எழுதியவர் : karuna (29-Oct-14, 1:43 pm)
Tanglish : paavam
பார்வை : 149

மேலே