ஒரு வினா
வாழ்க்கை!
பலமுறை தேடினாலும்
புரியாத புதிர்!
மனம் காணும் காட்சிகள்!
எண்ண அலைகள்!
விருப்பங்கள் என....
ஓராயிரம் அர்த்தங்களை..
ஒரு மூச்சில் நிறைத்து
உலகுக்கு அனுப்பினான்!
இறைவன்...
இன்று அவனிடமே
மீண்டும் ஒரு வினா!!
இறைவா..
வாழ்கையை வாழ்வது எப்படி?
இதயத்தின் வலிகளை
இயல்பாக உரைக்க
மொழி இன்றித் தவிக்கிறேன்!
விடை சொல் !!!