மனைவிக்கு மரியாதை

மனைவிக்கு மரியாதை


ஏண்டி ஹேமா, உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல. மொகத்திலெ சந்தோஷத்தையே காணம். நீ வந்து மூணு நாள் ஆகுது. உம் புருஷனும் உன் கூட வரல. அப்படி என்னடி நடந்துச்சு அங்கே? நீ மட்டும் தனியா வந்திருக்க.


அடி போடி பூமா. அந்த நாய எம் புருஷன்னு சொல்லாதே.

ஏண்டி என்ன ஆச்சு?

ஏண்டி நாம எத்தன தொலைக் காட்சித் தொடரிலும் சினிமாவிலும் பல இளம் ஜோடிகளையும் தம்பதிகளையும் பாத்திருப்போம்.

அதுக்கென்ன?

அதிலெ வர்ற புருஷன் இல்ல காதலன் தன் மனைவியை அல்லது காதலியை ”வாம்மா ….. போம்மா” ன்னோ அல்லது அவ பேரச்சொல்லித் தான் கூப்பிடறான். அந்தக் காதலி அவன பேரச் சொல்லித் தான் கூப்பிடறா. இல்லனா ‘”வாடா…. போடா”ன்னு சொல்றா. அந்த புருஷனும் மரியாதையா நடந்துக்கறான்.


ஆனா என்ன கலயாணம் பண்ணிட்ட அந்த நாயி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அவுங்க வீட்டுக்குப் போன நாளிலிருந்து என்ன ”வாடி… போடி.. என்னடி”ன்னு எதுக்கெடுத்தாலும் ‘டி’ போட்டுப் பேசறான். நா அவன் பேரச்சொல்லிக் கூப்பிடக் கூடாதாம். ”வாடா….. போடா…..ஏண்டா….என்னடா”ன்னு ”டா’ ப்போட்டுச் சொல்லக் கூடாதாம். “வாங்க… போங்க…என்னங்க … சரிங்க”ன்னு தான் சொல்லணுமாம். அந்த மாதிரி பொண்டாட்டியை மதிக்கத் தெரியாத நாயி கூட இனிமே நா வாழ முடியாது. அவனை விவாகரத்து செய்யப்போறென். எனக்கு என் கௌரவம் தான் முக்கியம்.

………………………………….?

எழுதியவர் : மலர் (31-Oct-14, 10:10 am)
பார்வை : 387

சிறந்த நகைச்சுவைகள்

மேலே