நோவாவின் சிறகு

இல்லாத தேசத்தில்
இரை தேடும்
பறவையொன்றின்
தொலைந்து போன
ஒரு பாதை
நீண்டு கிடப்பதான
கற்பனையில்
உதிர்க்கின்ற ஒரு இறகு
புது உலகை
விதைக்கத் தொடங்குகிறது,
நோவாவின்
கைமீறிய
ஒரு வாழ்க்கையாய்.....
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
