வனம்5
வாகனம் கிளம்பியது கானகத்தை நோக்கி ,மெலிதாய் ஊர்ந்தது மென்தென்றலோடு கைகோர்த்து.
பேராவல் தொற்றிக்கொண்டது எதிர்பார்ப்பையும் எங்களோடு ஏற்றிக்கொண்டதால்..
ஒவ்வொருவர் கண்களும் வெவ்வேறு திசைகளில் பிரயாணம் செய்தன.
ஒவ்வொருவரும் ஆராய்ச்சியாளராகவும் , கண்டுபிடிப்பாளராகவும் அவதாரம் எடுத்தோம் அடர்ந்த கானகத்தில்.
வழக்கமான மாநில சாலை ஏமாற்றத்தை அள்ளித்தந்தது எதிர்பார்த்த எங்களுக்கு..
தார்சாலை திடீரென மறைந்து மண்சாலை மலர்ந்தது. எதிர்பார்ப்பு எங்களுக்குத் தெரியாமல் பயத்தையும் கூட்டி வந்ததை யாருமற்ற வனத்தைக் கண்டதும் கண்டுகொண்டோம்.