பெண்ணின் அழகு

அழகிய நிலவு
பகலினில் ஒளிரும்
இரவினில்
ஒளிரும் நிலவும் கூட
அவள் ஒளியினில்
கருகும்!
பௌர்ணமி பார்வைகள்
கவிதைகள் புணையும்
கவிதையின் ரசனைகள்
தேன்மழை பொழியும்!
காலையில் பூக்களின்
கண்களும் கசியும்
கதிரவன் கூட
கையெடுத்து வணங்கும்
தென்றல் காற்றின்
தேகமெல்லாம் ராகமாகும்
தேவதை அவளின்
தேகம் கண்டால்!
விழியசைத்து அவள்
மெல்ல நகைத்தால்
மொழி பெயர்க்கும்
மொழிகள்தான் ஏது...?
இனிதாய்ப் புலரும்
இயற்க்கைக் காட்சிகள் போல
இதயமும் கூட
இயற்க்கையையாய் மாறும்
காலையில் காணும்
காட்சிகள் போல