++திடுக்கிடும் திருப்பங்கள்++பாகம் 6++இறுதி பாகம்

சடாரென இவனுக்கு விழிப்பு வந்த போது அவர்கள் இவனை பாயில் படுத்திருந்த நிலையிலேயே தூக்கிக்கொண்டு போவது போல கண்ணில் பட்டது.

ஆனால் இவனோ.. அந்நிகழ்ச்சியை தானே பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தான்.

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை...

மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தான்.

இவனை தூக்கியிருந்த பாயுடன் கிணற்றுக்குள் தாலாட்டுவது போல தாலாட்டிவிட்டு அப்படியே தூக்கி உள்ளே போட்டார்கள். பின் அப்படியே இரண்டு பேரும் உள்ளே குதித்தார்கள்.

பின்னாடியே சென்று பார்த்தான்.

அங்கு ஒன்றுமே புலப்படவில்லை.

அங்கிருந்த சிலையையும் காணவில்லை.

குதித்தவர்களையும் காணவில்லை..

பாயையும் காணவில்லை..

பாயில் படுத்திருந்த இவனையும் காணவில்லை...

கிணற்றின் மேலே புதிதாக ஏதோ எழுதி இருப்பது போல இவனுக்கு தோன்றியது மிகவும் மங்களாக‌...

என்னவென்று ஒவ்வொரு எழுத்தாக எழுத்துக்கூட்டி படித்தான்...

அங்கு எழுதி இருந்தது...

"இது வேறொருவனின் கனவு"

"உனக்கு அனுமதி இல்லை"

ஏதோ புரிந்தவனாய்

இவன் காற்றில் கலந்து விட்டான்


(முற்றும்)

(பின் குறிப்பு: சில கேள்விகளுக்கான பதில்கள்...

இவன் என்றோ இறந்தவன்...

இதுவரை நடந்தவை அனைத்தும் இவன் இறந்த பிறகு இவனது கனவைக் காண இவன் மேற்கொண்ட முயற்சிகளே...

இவனது அந்தக்கால கனவை காணவேண்டும் என்ற ஆசையுடன் ஒரு கற்பனையுடன் சுற்றிக்கொண்டிருந்தான்...

ஆனால் தவறாக இவன் காண வந்ததோ

வேறோருவனின் கனவு...

அவ்வளவே...

"புரிந்தவர்கள் எனக்கு புரியவைக்கவும்
புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்!"

நன்றி வணக்கம்..

நட்புடன் அ வேளாங்கண்ணி)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Nov-14, 3:44 pm)
பார்வை : 429

மேலே