மெய்முகம்
என் மீதான கோபத்தில்
தொலைவில் போகிறாய் நீ
என்னை
தொலைத்துவிட்டு ....
சுரம் கொதிக்கும் மணல்நீரில்
சுள்ளியாய் எரியும் நெஞ்சம்
சுழல் காற்றாய் சுற்றுகிறாய்
சூறைக் காற்றில் பிடியிழந்த
பஞ்சின் நூலாய் நான் !
தீயும் தீண்டிப்பார்க்காத
நெருப்பாற்றின் வேகம்
உன் நெஞ்சோரம்
கசிந்த வார்த்தைகளில்..
கசக்கி பிழிவதே உன்
கைப்பலன் என்றறிந்தபின்
கதறும் விதைகளின் மொழி
விழுமா உன் செவியில் ?
கனியாக இருப்பினும்
கனியாத மரமாய் இருப்பினும்
கல்லடிகள், தடியடிகள் மட்டுமே தண்டனை
வேரில் நீர் இருக்கும் வரை ....
நிழல் நீயென சாய்ந்தேன்
நித்திரைக் களைந்தாய்
மெய்முகம் வெளிக்காட்டினாய்...
அத்திரையில் தெரிந்தது அதுவரை
அமைதியாய் இருந்த பொய்முகம் !!
கவிதாயினி நிலாபாரதி