சக்திக்கொடு ---- 1

அவமானமாய் இருக்கிறது நான் ஆண் என்று கூற
ஓழுக்கம் ஓதும் இடத்தில் ஒழுங்கீனம்
பள்ளியில் பாலியல் பலாத்காரம்
படித்தவுடன் நார் நாராய் கிழிந்துப்போனது
செய்தித்தாள் கோபத்தில்........


இவன் மனிதனா?? மிருகமா??
மிருகம் இல்லை அது நிச்சயம்!!
அஞ்சும் அதுக்கூட இதனை செய்ய....



நானும் தேடித்தேடி பார்க்கிறேன் தமிழில்
கிடைக்கவில்லை ஒரு வார்த்தை அவனை ஏசுவதற்கு....
என் செவிக்கூட கூசுகிறது
கற்பிக்கும் ஆசிரியரே!!! கற்பழித்த கதை கேட்டப்போது....


பசுத்தோல் போத்திய புலியைப்போல்
ஆசிரிய உருவில் அரக்கர்களா?
நல்லாசிரியர் பலக்கண்ட இந்நாட்டில்
இவ்வரக்கர்களை நாம் என் செய்யே?


வேண்டும் ஒரு சட்டம்
இவ்வரக்கர்களை வதம் செய்ய.......
சக்திக்கொடு!! சக்திக்கொடு!!

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (18-Nov-14, 2:26 pm)
பார்வை : 300

மேலே