விலை இல்லா காதல்

விலை இல்லா காதல்! .

எத்தனை துன்பம் வந்தாலும்
உனக்கு துணையாய் நிற்ப்பேன்
என்று நீ சொன்னது..

உன் அருகிலே நான்
வந்த போது எல்லாம்
என் உடலை நீ ருசித்தது..

மறக்க முடியாத நினைவுகளை
நீ எனக்கு தந்தது.. என் மனதோடு
அட்டையாய் ஒட்டி இருக்கிறது..

இப்போது என்னை விட்டு
ஒதுங்கி போ.என்பது
சரி தானா?..என்னவனே..

என்னை தேனாய் ருசித்தாயடா
பன்னீராய் முகர்ந்தாயடா
இதற்க்கு தான் என்ன பதில்.

துளி துளியாய் சிந்துகின்ற
என் கண்ணீருக்கு விடை
தருவாயா எனக்கு நீ??

விட்டு விட்டேன் உன்னை நான்
விடை கொடு என் கேள்விக்கு
விலை இல்லை நம் காதலுக்கு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (29-Nov-14, 12:53 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 79

மேலே