மடி சாயும் வரம்

பூக்களெல்லாம் பூப்பதன் அழகே
தன் மடியில் சாய்ந்து கொள்ளும் சுகம்
அனைத்து செடிகளுக்கும் ....

என் முகமெல்லாம் பூப்பதற்கு
என் மடியில் நீ சாயும் வரம்
வேண்டும் தினந்தோறும் .....

மழைத்துளிகள் தன் மேல் விழுவதே
பேரின்பம் இளவேனில் முழுதும்
பூமிக்கெல்லாம் ......

மணக்கும் ஒவ்வொரு பூக்களும்
உன் கூந்தலில் முதுவேனிலும் எப்போதும்
ஆனந்த சொர்க்கத்தில் .....!

உன் மேல் விழும் மழைத்துளி
என் மேல் எப்போதும் கார்காலம் முழுதும் விழவேண்டும்
ஆனந்தமாய் ஒவ்வொரு ஜென்மமும் .....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Nov-14, 4:10 pm)
Tanglish : madi sayum varam
பார்வை : 154

மேலே