தாயின் கதறல்
கொளுத்தி
போட்ட நெருப்பு
பத்திகுச்சு
ஊரெங்கும் ,
பத்த வச்ச
நெருப்பு
பறந்து போச்சு
ஊரவிட்டு,
அணைக்க தான்
ஆளில்லை,
வேடிக்கை பாத்து
மொத்த ஊரும்
கருகி போச்சு,
குடும்பமோ
சந்தி சிறுச்சு
போச்சு ,
வெக்கம் கெட்ட
நாக்கு
நாலு விதமா
பேசிபோச்சு,
ஒத்த புள்ள
பெத்து பொத்தி பொத்தி
நான் வளத்தேன் ,
கழுகு வந்து
கொத்தி
போச்சே .............