எதற்காக

அகிம்சையை
கொள்கையாய்க் கொண்டு
அதனையே
தன வாழ்வின் செய்தியாக்கி
அகிலத்தில் உயர்ந்த
மகாத்மாவை பற்றியொரு
சந்தேகம் எழுந்ததனால்
விளக்கம் பெற
விழைந்த போது
என்ன அது என்று கேட்டவரை
கேட்டான் இளைஞன் ..
இவர் ஏன் பின் கீதையை
போற்றி வந்தார்..
அது போரிடு என்று சொல்லும்
போதனைதானே என்றான்..
முதியவர் சொன்னார்..
..
அதர்மம் எதுவென்றும்
தர்மம் எதுவென்றும்
கடமை எதுவென்றும்
வென்றது எதுவென்றும்
இறுதியில்
மிஞ்சியது எதுவென்றும்
எல்லாம் உரைத்திடும்
உணர்ந்ததாலே
அகிம்சையை
அண்ணல் காந்தி
அன்று ஏற்றார்!
இன்று ஓர் காந்தியும்
இல்லை என்பதால்
உன் வழி நீ செல்..
முடிவில் நல்லதை
கொணரும் வண்ணம்!
..
ஐயமும் தீர்ந்ததாலே
அவனும் நிறைவு கொண்டான்!