இப்படித்தான் இந்நாளில்

அவரசமான இந்த உலகில் யாரும்

தொலைந்த அன்பை தேடுவதேயில்லை ......

இன்னும் சொன்னால் அன்பை

தொலைத்ததை கூட அறிவதேயில்லை .....

அரக்க பறக்க ஓடி உழைத்து ....

காகிதம் மட்டுமே சேர்க்கின்றோம் .....

பொய்யும் புரட்டும் சொல்லி திரிந்து .....

மனித நேயம் மறந்தே போனோம் ...

டாஸ்மாக் போதையில் விழுந்து

பெற்ற பிள்ளையின் புன்னகை கூட மறந்தே போனோம் , .......

வீடும் .... காரும் வாங்கி வைத்து

உறவுகள் இன்றி தவிக்கின்றோம் ....

ஆம்

இப்படித்தான் இந்நாளில்

முடுக்கி விட்ட இயந்திரங்களை போலவே ....

முக்கால்வாசி மனிதர்களின் வாழ்வும் முடிந்தே போகிறது ....

எழுதியவர் : கலைச்சரண் (6-Dec-14, 6:59 pm)
பார்வை : 64

மேலே