தாத்தா சாவு

சிங்கத்தக் கூட தடியால அடிச்சி அடக்கிடுவாறு
ஆனா பாட்டியோட உரும்பளுக்கு மூலைல்ல
போய் அடங்கிடுவாறு!,

ஊருக் கண்ணுப் பட்டுச்சோ!
உறவுக் கண்ணுப் பட்டுச்சோ! (இல்ல)
விதவையான கிழவிக் கண்ணுப் பட்டுச்சோ! சிறுத்தப்போல வாழ்ந்த மனுஷ
சீக்கு வந்து படுத்தாச்சோ!
என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்துப்போச்சோ சொந்தபந்தம்,
ஒன்னுஇல்ல ரெண்டில்ல பத்துப் மாசம் வீட்டோட ஜெடமாச்சோ!,

பீ அல்லும் ஆயக் கூட சகிச்சிக்குல்ல
பால உத்துரப் பேராப்பிள்ளைங்க சகிச்சிடிச்சி,
காதுப் படப் பேசிடிச்சி!, அதக் கேட்டதாலோ
என்னவோ மானஸ்த்தன் உயிர் போயேபோச்சி!,

சாமிக்குத்தம் ஆச்சிதுன்னு ரெண்டுவர்சம் திருவிழாஇல்ல ஊருல்ல!,
இப்ப எங்கத் தாத்தா சாவுதான் திருவிழப்போல நடக்குதுப்புள்ள!,

ஊருல்லப் பூத்த பூவெல்ல எங்கத் தாத்தா சாவுக்குதான் பூத்ததுப்போல இருக்குது!,
தென்னஓல்ல பாடக்கட்டி, தப்படித் தாளம்மெல்லாம் கொட்டி, ஊர்வலம் காத்துக்கடக்குது!,
பத்து மாசம் கழிச்சி இப்பத்தான் குளிக்குது!,
வேக்கமில்ல மானமில்ல இது ஊர்முன்னாடி நடக்குது!,

கடைசி ஊர்வலத்துக்கு ராஜாமாதிரி தயாராயிட்டாறு பாரு !,
ஆனா ஊன சாதி சாதின்னு பேசுவாரு,
இப்ப தன்ன தூக்குரவன் சாதிக்கூட கேட்க்க முடியாம
வாய் அடைச்சி போரதப் பாரு !,
கெளம்பிடிச்சி ஊர்வலம் பாட்டி அப்புறம் கடன் கொடுத்தவன்னத்
தவிர கண்ணீர் அஞ்சலி போர்ஸ்டர்ல்ல மட்டும் கண்ணீரப் பாரு!!!....

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (6-Dec-14, 9:42 pm)
பார்வை : 2039

மேலே