நிலச்சரிவு
நிலச்சரிவு
மலை காடுகளில்
வெட்டப்படும்
மரங்களால்
செய்யப்பட்ட
கட்டில் தொட்டில்கள்
நிற்கின்றன
கம்பீரமாய்...
வெட்டுப்பட்ட மரங்கள்
விட்டுச் சென்ற வேர்கள்
மண்ணை விட்டு
சீர் கெட்டமையால் .,
சரிகின்றன
கம்பீரமாய்
நிற்கவேண்டிய
மலைகள்
ஆண்டுக்கோர் நிலச்சரிவாய்
தனி மனிதனின் பேராசையால்.