செல்லம் கொஞ்சி

செல்லம் கொஞ்சி
மகிழ
என் செல்லம்
வரப் போறான்.....
காத்திருந்த
கரங்களுக்குள்
கட்டித்
தழுவப்
போறான்.....

முதன் முதலாய்
உந்தன்
அழுகை.....எங்கள்
காதில்.....ஆனந்தம்
அலைமோதி
இங்கே.....விளையாடுதே.....!

பிஞ்சு
விரல் பிடித்து
கொஞ்சும்
சுகம் கோடி
சுகமே......இனி
உன்னால்
என்றும்
சந்தோஷம்
கூடி வருமே.....!

தாய் தந்தை
என்றான
மகிழ்ச்சியில்
நான் என்ற
அகந்தை
நாம் என்று
ஆனதே......!

எழுதியவர் : thampu (9-Dec-14, 3:19 am)
பார்வை : 93

மேலே