சிரிக்காதே

கோவிலின் உள்ளிருந்து
வெளியில் வந்தனர் தம்பதியர் .

சிரமப்பட்டு இரு சக்கர
வாகனத்தில்
ஏறினாள் மனைவி..

பின்னால் வந்த வயதான பாட்டி..
"பாத்து ஏறும்மா..விழுந்திடாதே"
என்று சொல்ல கணவன் புன்னகைத்தான்..

அதற்கு பின்
அந்த அம்மா சொன்ன சொல் மனைவியை
சிரிக்க வைத்தது..

அது..
"அப்பாவை கெட்டியாய் பிடிச்சிக்கோ "
என்பதுதான்..!

எழுதியவர் : கருணா (12-Dec-14, 4:26 pm)
பார்வை : 531

மேலே