தமிழனின் முதற்கடற் பயணம்

தமிழனின் முதற்கடற் பயணம் கி.மு. 3000 இல் தொடங்கியது.
ஏறக்குறைய 10000 ஆண்டுகளிக்கு முன் இலங்கை ஒரு தீவாகவே இல்லை மிக பெரிய தமிழர் நிலத்தில் தென் மண்டலத்தின் உயர்ந்த மலை பகுதிகளாக அடர்ந்த வளமானா நதி பாயும் பகுதியாக இருந்த பகுதிகள் தான் அவை .
இன்று வங்ககடலின் அடியில் எமது தாயகம்இரண்டும் இணைந்து இருக்கும் வடிவத்தைகாணலாம் அந்த பிரதேசம் எங்கும் தமிழர்கள் பர்ந்து வாழ்ந்தார்கள்.
அங்கிருந்து இன்று அவுசுத்திரேலியா அன்று சொல்லப்படும் கண்டம் வரை தமிழன் கால்நடையாக சென்று வந்தான் என்பது சரித்திர மானிட இயல் சான்றாக உள்ளது. எங்கள் மூத்த குடியின் ஒரு பகுதியினரே இன்று அவுசுத்திரேலியாவில் வாழ்பவர்கள். அதை அவர்களின் உருவ ஒற்றுமை நிற வடிவம் காட்டும்.
தமிழர்க்கும் தமிழ்மொழிக்கும் உரிய வரலாறு பற்றி ஆராய்ந்த ஹிராடடஸ் அவர்கள். அவர் எழுதிய மானிட வரலாறுகள் என்னும் நூலில் சில குறிப்புகளை சொல்கின்றார்.
ஆதி களத்தில் தமிழன் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் முன்னதாகவே பாகு , கள் , தேன் என்பவற்றை உணவாக சேர்த்தவர்கள், அவர்கள் மனித குலத்தின் முன்நோடிகள் என்று குறிப்பிடுவதோடு,. 4000 ஆண்டுகளுக்குமுன்பே இலக்கிய வரலாற்றுக்குள் சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள்.
அன்று அவர்களை மொழி அடிப்படையில் யாரும் அடையாள படுத்த முடியவில்லை, அவர்கள் மிக பரந்த நிலங்களில் குடியேறி குழுக்கள் குழுக்களாக பல இராட் சியங்களை அமைத்து வாழ்ந்துள்ளார்கள்.
தொல் பழங்காலத்தில், குமரிக் கண்டமாகவும், பழந்தமிழ்நாடாகவும் சிறப்புற்று விளங்கிய பகுதியிலிருந்து சுமார் 4000 ஆண்டுகளக்கு முன்பே வரலாறு படைத்தவன் தமிழன் என உறுதியாக் கூறுகிறார். ஹிராடடஸ் .
பழந் தமிழ்நாட்டில் தென்னை, பனை போன்ற மரமேறி வாழ்ந்ததமிழர்கள் விவசாயம் வேட்டை ஆடுதல் மீன் பிடித்தல், நெசவு, வாணிபம், கப்பல் கட்டுதல் என்று பல தொழில்களை உலிகின் பல பகுதிகளுக்கும் அறிமுகம் செய்தவர்கள்.
உலகின் கட்டுமரம் என்னும் சொல்லே இன்று எல்லா மொழிகளிலும் அன்றைய கப்பலுக்கு உரிய பெயராக விளங்குவதும் இதற்க்கு சான்று. அன்று தமிழன் மரங்களை இணைத்து கட்டி பாரிய படகுகளை உலகின் பல் பகுதிகளுக்கும் செலுத்தி சென்று குடியேற்றங்களை அமைத்து வாழத் தொடங்கினார்கள் எனவும்,
தமிழனின் முதற்கடற்பயணம் கி.மு. 3000 இல் தொடங்கியது. அப்பயணம், தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாகச் சென்று கீதோன், தீரே ஆகிய துறைமுகங்களை அடைந்தது.
மற்றும் ஒரு பிரிவு) கி.மு. 25000இல், பாரிகாசா(ஸா)விலிருந்து தொடங்கி கடற்கரை ஓரமாகவே சென்று செங்கடல் வழியாகத்தீரே, கீதோன் ஆகிய துறைமுகங்களை அடைந்தது.
மற்றொரு பிரிவு பிற்கலத்தில், அம்மரமேறித் தமிழர்களே பாமேசியர் என்றும் அப்பாமேசியர்களே பினீசியர்கள் மாயவங்கள்,என்றெல்லாம் அழைகக்கபட்டர்கள். பின் அவர்கள் தமிழர்கள் எனப் பெயரற்று வேறு இனத்தவகரா வாழ்ந்து வந்தனர் எனப் பறை சாட்டுகிறார் ஹிராடடஸ் அவர்கள்,
பினீசியர்கள் வடஅமெரிக்க மேற்குக் கரையோரமாகச் சென்று, வடஅமெரிக்காவின் கீழைகடற் கரையிலும் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். இப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள பினீசியர்கள் கல்வெட்டு, கி.மு. 1600அய்ச் சார்ந்தது.
இது அமெரிக்காவிலுள்ள “ரோட்சு(ஸ்) தீவில்” கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் சிவலிங்கமும், ஓர் என்ற சொல்லையும் காணலாம். இதிலிருந்து நாம் என்ன உணருகிறோம்?
அதாவது கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவிலும், அதனருகிலுள்ளள ரோட்சு தீவிலும் தமிழன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது.
ஆதிதமிழன் சிவனை வழிப்பட்டான். சிவலிங்கங்களை உருவாக்கிப் பூசித்து வந்தான். ஓம் என்ற வார்த்தை, தெய்வ வழிபாட்டில் உச்சரிக்கும் தமிழ்ச் சொல், தமிழ் மொழி 4000 ஆண்டுகளுக்கு முன்றே அமெரிக்காவில் உச்சரிக்கப்பட்டது என்ற வரலாற்றை உணர்கிறோம்.
கல்வெட்டுகளில் செதுக்கப்படுகிறது என்றால், தமிழனின் நிலைமையும், தமிழ் மொழியின் வளர்ச்சியையும், தொன்மையும் நன்கு தெளிவாக உணர முடிகிறது.
இன்னும் ஒரு வரலாற்று பேராசிரியர் அளச்ஸ் கோளின் என்பவர் தனது அயல் கிரக மனிதர்களின் வருக என்னும் நூலில் தமிழர்கள் வேறு கிரகம் ஒன்றில் இருந்து இங்கு வந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு அவ்வாறான தொடர்ப்புகள் இருந்திருக்க வேண்டும் என்று சொல்கின்றார்.
உலகில் அவர்களே மூத்த குடிகள் டார்வின் தத்துவத்தை உடைக்கும் மூல கூறுகள் அவரது ஆய்வில் அயல் கிரக மனிதரின் ஊடுருவல்கள் என்னும் தலைப்பில் நிகழ்த்தப்ட்டபோது இவியப்பு மிகு தவல்களை சொல்கின்றார் .
உலகில் ஒரே மொழி தமிழ் மொழியாக இருந்தது என்றும் அன்று நாம் எல்லோருமே தமில் மொழி பேசிய மூத்ததய்ரின் வாரிசுகள் என்றும் சொல்கின்றார். காலபோக்கில் நாம் வேறு மொழிகளை பெசிகொன்டாலும் இன்று உள்ள உலக மொழி அனைத்தும் தமில் மொழியின் குழந்தை மொழி என்கிறார்.
இந்தகைய தொன்மையான தமிழன். தனது இலக்கிய வரலாற்றில் தலை, இடை, கடை என மூன்று தமிழ் சங்கங்கள் அமைத்து மொழி வளர்ச்சிக்கு துணை நின்றான் என்னும் ஆதரங்கள் பல இருந்தன இன்னும் பல எஞ்சி இருகின்றன.
ஏறக்குறைய 20000 ஆண்டுகள் தொன்மை மிக்க இலக்கிய வரலாறு உலகில் தமிழனுக்கு அன்றி வேறு எங்கும் இல்லை, ஆதாரங்கள் பல இன்னும் ஆழமான கல் அடியில் புதைந்து கிடக்கின்றான. அந்த கடலடி உயர் நிலங்கள் தோறும் தமிழர் காலம் காலமாக வாழ்ந்தார்கள்.
தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் பாரம்பரிய வரலாற்று சிறப்பை கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள் . நாகரீகத்தின் தொடக்கமோ, அல்லது ஒரு வளர்ந்த நாகரீகத்தின் அழிவோ அங்கு நிகழ்ந்துள்ளது.
தமிழர்கள் இன்று வாழும் நிலங்கள் அன்று அவன் வாழ்வதற்கு தகுந்த நிலம் அல்ல என்று ஒதுக்கிவைத்த மலையும், மழையும், காட்டு ஆறுகளும், பாம்புகளும் விலங்குகளும் வாழும் அடர் காடுகள், தமிழன் முன்பு வாழ்ந்த நெய்தல் நிலம், இன்று ஆற்று முகவாய்களாக காணும் பகுதிக்கு, இன்னும் கடல் உள் நோக்கி கடலடியில் கிடக்கின்றது.
எனினும் தமிழர்கள் வளர்த்த சங்கங்களில் முதல் இரண்டு சங்கங்கள் கடலுக்குள் போய்விட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன . அந்த இரண்டு சங்கங்களும் இங்குதான் இந்த நிலத்தில் எங்கோ இருகின்றன.
இற்றைக்கு 5000 ஆண்டுகள் பழமை மிக்க இலக்கிய வடிவங்களான நூல்களைளின் எஞ்சிய தொகுப்பே அகத்தியம் ஆகும் என்றும் படிக்கிறோம் இன்று எம் கையில் இருக்கும் இலக்கியங்கள் யாவும் கடை சங்க காலத்துக்கு உரியவையாக உள்ளன.
அண்ணலும் முதல் சங்க களம் முதல் போதிக்க பட்ட தமிழ் இலக்கிய அடிப்படைகளை அவை வெகுவாக காட்டுகின்றன. ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையான
தொல்காப்பிய வடிவம் அதன் செழுமை அன்றைய காலத்துக்கு முன்னதாகவே தமிழன் இலக்கிய இலக்கண வடிவங்களில் மேன்மை கொண்டு வாழ்ந்துள்ளான் என கூறுகின்றது....
கடைசி தமிழ் சங்கத்துக்கு தொடர்பான விடையங்கள் மதுரையில் நடந்தன என்று நாம் பல கதைகள் ஊடாகவும் திருக்குறள் அரங்கேற்றம் பற்றியும் நிறைய ஆதாரம் இருந்தாலும் இன்னும் அது தொடர்பான தர்க்கங்கள் அதைப் பற்றியும் விடைகாண முடியாத பல புதிர்கள் உள்ளன.
இக்காலம் முன்னதாகவே தமிழ் மொழியை வளர்க்க, சிவன் என்னும் மூத்த தமிழ் குடி வேந்தன், அவன் மகன் முருகன் என்றும், சேரர், சோழர் பாண்டிய மன்னர்கள், என்றும் தமிழ் சங்கங்களை நிறுவிப் புலவர்களை ஆதரித்து வந்தனர்.
தென் மதுரை என்று சொல்லப்படும் ஈழத்து தென்கரை யில் அமைந்த இராவணன் காலத்து பெரும் நகரம் முதல் சங்கம் என புகழ் பெற்று, அங்கு இசையும் இயலும் நாடகமும் செழித்து வளர்ந்து இருந்தன, அங்கு அகத்தியரும் இராவணேசுவர சக்கரவர்த்தியும் இசியமீட்டி அலங்கரித்தார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன .
அன்று இருந்த முதல் சங்கம் சுனாமிப் பேரழிவில் கடலுக்குள் போனது. பின்னர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது. இது பூம்புகாருக்கு கிழக்காக இன்று கடலுக்குள் இருக்கிறது இங்குதான் இளங்கோ அடிகளார் தனது படிப்புகளை தொடங்கினார் என்று சொல்ல படுகின்றது.
அகத்தியரின் மாணக்கனாக இளங்கோ அடிகளை கூறுவார்கள் . அகத்தியரின் பாசறை சாலை ஒன்று திருகோணமலையில் வெருகல் மகாவலி ஆற்றோடு இன்றும் உள்ளது இதற்கான் மிக பெரிய சான்று. இந்த மகவளியும் களனி ஆறும் மவுருளி ஆற்றின் கிளை நதிகள் என்றும் ஒரு குறிப்பு சொல்லபடுகின்றது.
மவுருளி ஆறு கங்கை நதியை காவேரி நதியை இணைத்துனியும் மற்றொரு சுனாமி பேரலை ஏற்படவே அதையும் கடல் விழுங்கியது. பின்னர்தான் மூன்றாம் தமிழ்சங்கம் கூடல் மாநகர் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகரில் அமைக்கப் பட்டது.
தென்கயிலை திருகோணமலை சிவனும் ஆதிசேடனும் போர் புரிந்த நிலம் விரிந்த கடல் கொண்ட நிலத்தில் தமிழனின் வரலாற்று சான்றுகள் கடலடியில் உண்டு என்பதை திருகோணேசுவரன் புறத்து வரலாறு சொல்கின்றது.
இவ்விருவரும் முதல் சங்கத்தவர்கள். அன்று ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் 89 மன்னர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குள் ஆதிசெடன் சிவனை எதிர்த்து படை எடுத்தார் என்றும் அப்போது நடந்த சண்டையில் ஆதிசேடனை சிவன் அழித்ததாகவும் புராணகதைகள் சொல்கின்றன.

நன்றி:- முகநூல் தமிழ் community

எழுதியவர் : தவம் (13-Dec-14, 5:32 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 341

மேலே