முத்தொள்ளாயிரம் - சேரன் 10 -இன்னிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
இன்னிசை வெண்பா
இவனென் நலங்கவர்ந்த கள்வன் இவனெனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்(று) - அஞ்சொலாய்
செல்லும் நெறியெலாம் சேரலர்கோக் கோதைக்குச்
சொல்லும் பழியோ பெரிது! 10
பொருளுரை
இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன்,
இவன் என் நிறைநெஞ்சைக் குறைநெஞ்சு ஆக்கிய கள்வன்- என்று சேரலர் கோக்கோதை செல்லும் இடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே!
“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள்!

