உனக்கான பெண்ணே நான்தான்டா

என் உணர்வுகளுக்கு உறவாக வந்தாய்
உறவான உன்னை உயிராய் வைத்தேன்...!

கனவுகள் காண கற்றுக்கொடுத்தாய்
தேனூறும் ஆசைகளை நெஞ்சோடு வளர்த்தேன்...!

பேதை என்னிடம் காதலை விதைத்தாய்
சுகமான சுமையாய் சுமந்தேன்...!

நாளுக்கு நாள் அன்பை கொடுத்தாய்
வளர்பிறை நிலவாய் அன்பில் வளர்ந்தேன்...!

எனக்கே எனக்கான வாழ்க்கையை கொடுத்தாய்
உனக்கே உனக்கான பெண்ணாய் வாழ்கிறேன்...!

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (17-Dec-14, 9:38 am)
பார்வை : 63

மேலே