இயற்கை
எண்ணச் சிதறல்கள் ஏக்கம் கொள்ளுதம்மா
உன் வண்ணச் சிதறல்கள் வாணவுல் ஆகுதம்மா
மழையின் சாரல் பூமி நனைக்குதம்மா
மழழை போல என்னுள்ளம் துள்ளி குதிக்குதம்மா
காற்றாக உன் (சு)வாசம் வருகுதம்மா
என் மூச்சோடு உறவாடு செல்லுதம்மா
கடல் மீது அலைகளாக வருகிறாயம்மா
என்னை சுலையாக நிற்க வைத்து செல்கிறாயம்மா
மலையாக வானுயர்ந்து செல்கிறாயம்மா
என்னை மழை கண்ட மயில்போல் ஆடச்சொல்கிறாயம்மா
நதியாக நடனமாடி செல்கிறாயம்மா
என்னுள்ளம் உன்னை கவி பாடச்சொல்லுதம்மா
காற்றில்லாத இடம் கூட இருக்குதம்மா
உன்னை நேசிக்காத உள்ளம் எங்கே இருக்குதம்மா
பஞ்ச பூதங்களும் உனக்குள் அடக்கமம்மா
உன்னை படைத்தவனுக்கு ஒரு கோடி வணக்கமம்மா