காதல்
காதலே !
காதலின் அறிகுறி என்ன ?
அவள் இரு விழிகளுக்குள் தொலைந்த எனது விழிகளை தேட எனது இதயத்தை அனுப்பினேனே அதுவா ?
கடல் மணலில் அவள் நடக்க அவளது பாதச்சவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே அதுவா ?
விடியலோடு விளையாடும் இரவுகள் போல அவள் நினைவுகளோடு விளையாடும் என் கணவுகள் பார்த்து ரசித்ததே எனது உறக்கம் அதுவா ?
உன் வியர்வை துளிகளால் உண்டான வாணவில்லிடம் என் எண்ணம் சொல்லி வந்தேனே அதுவா ?
என் மூச்சுக் காற்றாக வரும் உன் நினைவுகளுக்கு உயிர் கொடுத்து காதல் சொல்ல ஆயிரம் முறை ஒத்திகை பார்த்தேனே அதுவா ?
இறுதியில் உன்னிடம் காதல் சொல்ல முயன்றபோது வார்த்தைகளுக்குள் சண்டையிட்டுக்கொண்டு வெற்றி பெற்ற மௌனத்தினால் உன்னிடம் தோல்வி பெற்றேனே அதுவா ?