உண்மைக் காதல் உருவம் பாராது

காதல் அழிவதில்லை
----------------------------------------
குப்பைத்தொட்டி பக்கமதில்
கொஞ்சுகின்ற ஜோடியது
அக்கம்பக்கம் பார்த்திடாமல்
அச்சம்தன்னை விற்குதடி
நாகமரத்தின் நிழலினிலே
நாகரீக தோரணையில்
ஆழம்பார்க்கும் ஆய்வுகளில்
ஆசைதுள்ளப் பேசுதடி..
நாதா..! நாதி..! காலமெல்லாம்
நாதியற்றுப் போனதென்று
பார்த்தவுடனே காமமென
பத்திகிட்டுப் போகுதடி..
வாழுகின்ற காதலென்றும்
வயதுவந்தால் வருவதில்லை
ஆயுளுள்ள காதலென்றும்
அறுபதில்கூடப் பிரிவதில்லை..
உருவம்பார்த்த காதலது
உறவில்பாவம் அறிவதில்லை
உள்ளம்பார்த்த காதெலென்றும்
பள்ளம்மேடுப் பார்ப்பதில்லை
எழுதிகொண்டே நானிருப்பேன்
எனக்கும்காதல் உள்ளதென்று
அறிவைசுமக்கும் மூளையிலே
ஆட்சியென்றும் அவள்தானே..!!