நானும் பாக்கியசாலி தான்

அவன் தொல்லையால் அழுது தீர்த்து
ஆறுதல் வேண்டி
அன்னை மடி தேடினேன்
பக்கம் வந்தவள்
பால் கணக்கு முதல்
வட்டி கணக்கு வரை
வாங்கிய கடனை
பாக்கியில்லாமல் சொல்லி முடித்தாள்
ஆனாலும் பாக்கியசாலி நான்
இத்தனையிருந்தும்
அடுத்தவரிடம் இரவல் கேட்காமல்
உரியவளிடம் முறையிட்டவள் என் தாய் !!!!!!!!!!!!!!

வேறு வழியின்றி
அவனால் மாண்ட உயிரை மீண்டும் பெற
தந்தையின் வார்த்தைகள் நாடினேன்
விளக்கம் ஏதும் தராமல்
நடந்த கதையை முழுதும் விவரிக்காமல்
தலை குனிந்து முன் நின்றேன்
தலை சுற்றி கீழே விழும் அளவுக்கு
குடி அவரை குடி கொண்டு நின்றது
இருந்தும் நான் பாக்கியசாலிதான்
மதுவின் மாயையில் வழிமாறிடாமல்
மனைவியின் நினைவில் வீடு வந்துவிட்டார் !!!!!!!!!!!

கடைசியாக ஒருமுறையென்று
அண்ணனிடமும் சென்றேன்
காத்திரு என்றவன்
காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தான்
காதலியாக இருப்பாளோ
எனக்குள் ஐயம் எழ !
எழுந்து அவனருகினில் சென்றேன்
அண்ணாந்து பார்த்தவன்
சற்றே தாமதமாய் கேட்டான்
நீ இன்னும் போகலையா?
இருந்தும் எனக்குள் தோன்றியது
நானும் பாக்கியசாலிதான்
அண்ணி வந்தபின்னும்
அண்ணன் நான் வந்தததை
மறக்கவில்லை !!!!!!!!!

ஆறுதல் தேடிய எனக்கு
அமைதியே விடையானது
இருந்தும்
பாக்கியசாலி நான்
இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்
இத்தனை சிறப்பாய்
அவனை தவிர வேறு யாராலும்
சொல்லி கொடுத்திருக்க முடியாது !!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : சுமித்ரா (23-Dec-14, 5:24 pm)
பார்வை : 99

மேலே