இப்படிக்கு நான்

அன்புள்ள அன்பே....
விடை பெரும் நேரமிது
பிரிந்து செல்கிறேன்
உன்னை விட்டு....

உன்னோடு இருந்த
மாதங்களும் வாரங்களும்
நாட்களும் நொடிகளும்
இறந்த காலமாக போவதை
நினைத்து அழுகிறேன்....

நாம் சேர்ந்திருந்த இரவுகள்
இனி வர போவதில்லை....
நாம் இணைந்திருந்த பகல்கள்
இனி வர போவதில்லை....

இத்தனை நாட்களும்
நான் இருந்த இடத்தில்
இனி வேறு யாரோ
இருக்க போகிறார்கள்...

இனி வரும் இரவுகளும் பகல்களும்
உங்களுக்காக காத்திருக்கும்
நிமிடமும் நொடியும்
உங்களோடு இணைந்திருக்கும்....

வருந்தாதே அன்பே
இது தான் விதி...
காலத்தின் கட்டாயம்..
நிச்சயம் நான்
திரும்பி வர போவதில்லை.....

இன்னும் சில நாட்களில்
மொத்தமாய் நான் உன்னை
விட்டு போய்விடுவேன்....
இதோ பிரிவின்
கடைசி மணி துளிகளில் நாம்....

பிரிந்த பின்
நான் இருக்க போவதில்லை...
நிச்சயம் நீ இருப்பாய்
என் நினைவுகளோடு.....

நான் தந்த துன்பங்களையும்
கஷ்டங்களையும்
மறந்து விடு அன்பே....
எண்ணி மகிழ நான் தந்த
இன்பங்கள் போதும் உனக்கு.....

போகிறேன் நான்.....
விடை கொடு அன்பே...
நேரம் இருந்தால் என்னை
நினைத்து பார்....
நிச்சயம் உயிர் பெறுவேன்
உன் நினைவுகளில் மட்டும் நான்.....

இப்படிக்கு
2014.......

எழுதியவர் : சந்தியா பிரியா (24-Dec-14, 11:29 am)
Tanglish : ipadikku naan
பார்வை : 273

மேலே