வாழ்க்கை சும்மா

தொடர்ந்து கொண்டிருகிறது
துரோகம் ,
மறைந்து கொண்டிருகிறது
மானம் ,
இறந்து கொண்டிருகிறது
நம்பிக்கை ,

இத்தெல்லாம் யார்
படைத்தது ,
அவனவன் அவனுக்கு
பிடித்ததை செய்கிறான் ,

இதில் யாருக்கு
என்ன லாபம்
யாருக்கு என்ன நஷ்டம் ,

நாம் பிறந்தது
நம் விருப்பதில்லா ?
இல்லையே .

பிறகு என்ன
கீதை சொல்லி
பைபிள் சொல்லி
குரான் சொல்லி
பெரியார் சொல்லி
சாக்ரடிஸ் சொல்லி
பொல்லாச்கி சொல்லி
வள்ளுவர் சொல்லி

கேட்காதவர்கள்
நான் சொல்லி
கேட்க போவதில்லை

இருந்தாலும்
என் திருப்பதிக்கு
நானும் சொல்கிறேன் .

வாழும்
நாட்களை
உனக்கான .......
.......................
..................
................
வாழுங்கள் .

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 7:48 pm)
Tanglish : vaazhkkai summa
பார்வை : 113

மேலே