அழுகை

அழுத கண்ணில் நீர் வடிய
பார்ப்பவர் நெஞ்சு கசிந்துருகும்!
அடுத்தவர் சோகம் நாம் உணர
ஆண்டவன் படைத்த அற்புதம்!
அழுவது குறைக்கும் சோகக் கலை
பெற்றுத்தரும் மன ஆறுதல் அனுதாபங்களை!
ஆனந்தத்திலும் அழுகை வரும்
மன அழுத்தம் குறைத்து மருந்து தரும்!
ஆபத்தில் அரணாய் கை கொடுக்கும்
அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும்!