கானல் நீா் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கானல் நீா் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-Mar-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 572 |
புள்ளி | : 282 |
எண்ணங்களில் வா்ணங்கள் தேடும்! சாமன்யன்
நேற்று பிறந்ததற்காக சந்தோசப்படு
இன்று இருப்பதற்காக மகிழ்ந்திரு
நாளை இறப்பதற்காக ஏன் வருந்துகிறாய்!
இல்லாததற்காக எங்கும் நெஞ்சம்
இழந்துவிடும் வாழ்வின் நிஜம்!நிதர்சனம்!
இங்கு தோற்றவர் யாரும் இல்லை!தோல்வி என்பதே நாளைய வெற்றிக்கான பயிற்சி! முயற்சி!
நேற்று பிறந்ததற்காக சந்தோசப்படு
இன்று இருப்பதற்காக மகிழ்ந்திரு
நாளை இறப்பதற்காக ஏன் வருந்துகிறாய்!
இல்லாததற்காக எங்கும் நெஞ்சம்
இழந்துவிடும் வாழ்வின் நிஜம்!நிதர்சனம்!
இங்கு தோற்றவர் யாரும் இல்லை!தோல்வி என்பதே நாளைய வெற்றிக்கான பயிற்சி! முயற்சி!
செத்த உயிர்க்கு சிந்தனை இல்லை
சிந்திய வேர்வைக்கு சொந்தமும் இல்லை!
ஆடம்பர அகங்காரம் அறிவின் கிளர்ச்சி
அகத்துக்கு தேவை அன்பின் எழுச்சி!
ஆனந்தம் என்பது நல்ல அனுபவம் என்றால்
அன்பெனும் அரண் தேடி முரண்படுவோம்!
தித்திக்கும் தின்பண்டம்
திடுக்க வைக்கும் வெடிச் சத்தம்
திருப்தியான சாப்பாடு
ஊர் சுற்றும் உல்லாசம்
வருடத்தின் சந்தோச ஆனந்தம்
வருத்தங்களின் வன வாசம்!
களிப்புடனே பூரிப்போம்
இனிமையான திருநாளில்
தீபாவளி திருநாளில்
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!
சரி என்றால் ஆபாசம் ஏற்கும் ஆனந்தம்
முரண் என்றால் முடியும் ஆபத்தில்
இனிமை தழைக்க இனிப்பாய் பொங்கும்
உழவர் உழைப்பின் உன்னதம் போற்றும்
இயற்கையை வழிபடும்
இல்லத் திருநாள்!
கால்நடை நட்பின் நன்றித் திருநாள்!
அறுவடை திருநாள்! அற்புத திருநாள்!
ஆனந்தம் பொங்கும் தமிழன் திருநாள்!
புத்தாடை உடுத்தி கொண்டாடி களிப்போம்!
பாரம்பர்யம் காப்போம் பழகி சிரிப்போம்!
பொங்கலோ! பொங்கல்!
முரண்பாடுகளின் மொத்த உருவமாய்
முடியாத பின்னக் கணிதமாய்
கானல் நீரின் காட்சி உண்மையாய்
காதலின் எண்ண அலைகள்!
கரை சேராப் படகில்
காலம் வெல்லும் போராட்டம்!
நம் சொல்லின் செயலின்
வெற்றியும் பெருமையும்
உந்துதல் என்றால்
உண்மையில் கர்வமும் காழ்ப்புமே
கடைசி வரை காதல் செய்யும்!
ஆணவமும் அராஜகமுமே
ஆட்சி செய்யும்!
எதார்த்தத்தில் வெற்றி என்பதே
வெறியும் வன்மமுமே!
ஆண்டவரும் ஆள்பவரும்
ஆழப் பதித்த ஆசை விருட்சம்
ஆறாத புண்ணின் அசிங்க ரணம்
அன்பினை மருந்தாய்
அரிதாய் கொள்வதால்
ஆசை மனங்கள்
ஆறாத ரணமாய்
அல்லல் படுகிறது!
போட்டியே வாழ்க்கையாய்
பாடம் படித்து
பொழுதைக் கழித்து
பொறுமை இழக்கும்
பரிதாபம் ஏன்!
பாசம் நேசம் பணமாய் போனதால்
பரிகாச வாழ்க்கை இது!
நிஜமாய் வாழ நிம்மதியாய் வாழ
நிர்பந்தங்கள் நிலை மாற்றும்!
ஆனந்தம் எளிமையில் கண்டால்
அறிந்தவன் புரிய ஆசைகள் கோடி!
அனுபவங்கள் தேடும் அனைத்தையும் நாடி!
மண்ணில் விழாத விதைகள் ஆகாது மரமாய்!
வருத்தங்கள் இல்லாத விருப்பங்கள் ஆகாது வசமாய்!
எந்திரமாய் தந்திரமாய் தனத்துக்கு வாழாமல்
எதார்த்த எளிமையாய் அன்புக்கு வாழ்ந்திடு!
கர்வமும் கோபமும் பழகிய விஷங்கள்
வேண்டாத வினையின் ரோக விருட்சங்கள்!
சம்பாத்ய சாதனைகள்
சவமாய் ஆகும் வரை!
சௌக்கி்யமாய் வாழ்வதற்கு
சம்பிரதாயங்கள் எதிர் மறை!
கள்ளப் பணம் கறுப்பு பணம்
காந்தி சிரிக்கும் நல்ல பணம்!
வாழ்வதற்காய் வந்த பணம்
வசதியில் இல்லை குணம்!
நன்மைகள் நைந்து போகும்
கொடுமை தான் பொறாமையாகும்!
மகிழ்ச்சியாய் வசந்த காலம்
ரசனையாய் வாழும் ஞானம்!
காதல்!
பிரத்யேக அலைவரிசையில்!
சங்கேதமாய் இரு மனங்கள் பேசும்
வானொலி!
காதல்!
இனம் காணா இதயத்தை
மனம் காணும் மகத்துவம்!
காதல்!
ஆனந்தத்தின் அடித்தளமாய் ஓர்
ஆத்மார்த்த ஆலிங்கன பந்தம்!
காதல்!
அன்பின் அடையாளமாய்
அகங்காணும் அற்புதம்!
வயோதிகம்!
........வாழ்ந்ததின் எச்சம்!
.............வருத்தங்களின் மிச்சம்!
.........................வலிகளின் சொச்சம்!
ஆழ்ந்த மூச்சும் அமைதி பேச்சும் அனுபவமாய்!
ஆசை அடங்கி ஒடுங்கி வாழும் நிம்மதியாய்!
சந்ததிகளின் சுதந்திர சங்கடமாய்!
சக வாழ்வின் சன்யாச சந்தர்ப்பமாய்!
சாக நடை பிணங்கள்!
சமூகத்தின் கடை இனங்கள்!
நண்பர்கள் (24)

பர்ஷான்
இலங்கை (சாய்ந்தமருது)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி
