சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி 2015

உயர் சாதி மனிதன் எதிரில் வந்தால்
காலணியை கையிலேந்திய நிலை.....!
மலத்தை கீழ் சாதி மனிதன் சுமந்த,
சாதி வன்கொடுமை ஒழிந்தது….! காலத்தால்.

கணினி பட்டறையில், தொழில் சார்ந்த கருத்துக்கள்....!
சிந்தி சிதறியதால், பல மனங்கள் பாசமாய் இணைந்திட....!
காணாமல் போகும் சாதி….! கருத்துக்களால்.

இல்லாத இதயங்களுக்கு இன்பமாய் இறைத்து....!
இருள் சூழ்ந்த மதவாதத்தை வதமாக்கி....!
மனிதநேயம் மடைதிறந்தால்
மாண்டுபோகும் சாதி….! அன்பால்.

கல்லூரியில், கனாகாலங்களில்
கனிவாய் பழகி, கைகோர்த்த நட்புகள்.....!
வானமே எல்லையாய் வாகை சூடினால்....!
வகுந்து போகும் சாதி…..! நட்பால்.

படை கொண்டு எதிர்த்தாலும்....!
படைத்த பரமன் சூழ்ச்சி செய்தாலும்....!
பெற்றமனம் நோகாமல், பற்றிய கை விலகாது
பண்புடன் செய்யும் காதல் திருமணத்தால்....!
துவண்டு விழும் சாதி….! காதலால்.

கவிதையாலும் கட்டுரையாலும் ஒழியாது சாதி....!
ஒழிந்திடும், அன்பெனும் கடல் அலைகள் ஆர்பரித்தால்.....!
அது நாள்வரை, வன்முறைக்கு வக்காலத்து வாங்காமல்.....!
சாதியை புதைத்து, புது உலகை படைத்திடுவோம்….! அமைதியால்.

இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
பெயர் : பெ. கோகுலபாலன்
முகவரி - #2, 30வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை - 61.
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9444079620

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (7-Jan-15, 11:36 pm)
பார்வை : 3251

மேலே