விடியல் தரும் விளக்கங்கள்

விழித்துப் பாருங்கள்
விடிந்திருப்பது புரியும் - மனம்
விளித்துப் பாருங்கள் அதில்
விளைந்திருப்பது தெளியும்...!!
அழைப்பது என்பதே விளிப்பது - நம்மை
அறிவது என்பதே ஜெயிப்பது - பிறரையும்
அரவணைத்து செல்வதே அன்பது - நாம்
அகமகிழ ஒரே ஒரு வழியது.....!!