அப்பாவி மக்கள்

ஒரு ஓநாய்
தனியாக அழுது கொண்டிருந்தது..
அதைக் கண்டு
மனமிரங்கி
கேட்டது ஒரு
ஆடு..
ஏன் நீ அழுகிறாய் என்று ..!
கொஞ்ச நேரத்தில்
ஆட்டை..
ருசித்துக் கொண்டே
அழுது கொண்டிருந்தது
ஓநாய்!
அடுத்த ஆடும் கேட்டது..
ஏன் அழுகிறாய் என்று..
ஓநாய் சிரித்தது!

எழுதியவர் : கருணா (15-Jan-15, 10:42 pm)
Tanglish : appavi makkal
பார்வை : 479

மேலே