என்னோடு நீ வாழ நேரிட்டால்

என்னோடு நீ வாழ நேரிட்டால் ... வரிகள்
திருத்தப்பட்டது
--கவிஞர் அருணோதயம் அவர்களால்.

நீர்குமிழியாய் உடையும் கோபங்களோடு அடிக்கடி சண்டைபோடுவேன்.

ஊடலை தீர்த்துவைக்க நேரமின்றி அலுவலகம் ஓடுவேன்.

அவ்வப்போது உனை அழகென்பேன்.

நேரங்காலம் தெரியாமல் ஐ லவ்யூ சொல்வேன்.

ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தராமல்
எதெதற்கு ஆசைப்பட வேண்டுமென்று சொல்லிதருவேன்.

ஈமெயில் பாஸ்வேடாய் இருக்கும் உனது பெயரை
எ.ல்.ஐ.சி நாமிநேஷனுக்கு மாற்றுவேன்.

தவறிய அழைப்புகளில் உனது பெயர் இருந்தால்
தவறாமல் அழைப்னே்.

மொத்தத்தில் ஒரு வரியில் சொல்வதென்றால்,அடுத்தஜென்மத்திலும் நானே வேண்டுமென உனை ஏங்க வைப்பேன்

எழுதியவர் : அருணோதயம். (17-Jan-15, 12:00 am)
பார்வை : 159

மேலே