புவியின் சொர்க்கம்
பெண் என்று பிறந்ததினால்
பேதம் கண்டாய் அன்று
விண் சென்று வந்ததினால்
வென்று விட்டாய் இன்று
நாற்று நடும் பெண்கள் என்று
சில பேர் சொன்னதுண்டு
நாட்டை ஆண்ட பெண்களோ
பல பேர் இங்கு உண்டு
வரலாற்றில் ஜான்சிராணி பெயர் கொண்டு
வீரத்தில் ஒரு பங்கு உனக்குண்டு
வரும் காலத்தில் தெரசாவின் பெயர் கொண்டு
மனித நேயத்தில் பெரும் பங்கு உனக்குண்டு
ஆகாயம் இடறிய போதும்
அடி தவறி சறுக்கிய போதும்
அம்மா என்று அலறியதுண்டு
அங்கம் அது எரியும் போதும்
ஆவி அது பிரியும் போதும்
அப்பா என்றவரை கண்டதில்லை
பெண்ணே நீ சொர்க்கத்தை பூமிக்கு
வரம் வாங்கி வந்த செல்வம்
ஆண் வர்க்கத்திற்கே வாழ்வளிக்கும்
வணங்கும் நல்ல தெய்வம்...!