நிச்சயம் முதல் திருமணம் வரை
அவன் :
பெண் பார்க்க வந்த போதே
என் இதயத்தை எடுத்துக்கொண்டாய்
அதனாலென்ன
திருமணத்தின் போது திருப்பி கொடு
உன் இதயத்தை
அவள் :
என் கழுத்து
காத்து கிடக்கிறது
உன் தாலிக்காக
ஏனென்றால்
அது அதற்காகவே படைக்கப்பட்டது
அவள் :
பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்ட
லைலா - நான்
மஜ்னு - நீ
அவன் :
உங்கள் வீட்டில் கொடுத்த
உன் புகைப்படதிடம் கேள்
அது சொல்லும் -இது
நிச்சயிக்கப்பட்ட திருமணமல்ல
காதல் திருமணமென்று
அவன் :
உன் மகிழ்ச்சியின் நீளத்திற்கும்
அழகின் ஆழத்திற்கும்
ஆண்டவனால் அனுப்பப்பட்டவன்
நான்
அவள் :
உன் தலை கோதவே
நான்
விரல் வளர்த்தேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
