இராஜ் குமார் உன்னால் ஏன் முடியாது

இந் நாளாம் நன்னாள் பொன்னாள்
எந்நாளும் கவிஞனுக்கு உயர்நாள்
ஆயினும்
இந் நாள் நீ உலகிற்கு வந்த முதல் நாள் !
முதல் நாளில் நீ சொன்ன கவிதை அழுகை
அன்னை முத்தமிடும் போது சொன்ன கவிதை அம்மா
பின் தொடர்ந்தது உள்ளத்தின் கவிதை
உன்னால் ஏன் முடியாது என்று கேட்கும் நீ
எழுது
உன்னால் உயரட்டும் எழுத்து !

----பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-15, 9:48 am)
பார்வை : 5229

மேலே