வலி

வலியை கவிதையில் கூற ...
கூடி வருவதில்லை வார்த்தைகள் ..
வலியில் விலகும் மனிதர் போல் ..
விதியால் விலகுமோ வார்த்தைகள்!

வலிமையான வார்த்தையின் மௌனம்..
வலியில் நட்பின் பயணம் !
மொழிக்கு ஏற்பட்டதோ பஞ்சம் ?
மௌனத்தில் வார்த்தைகளின் தஞ்சம் !

வார்த்தைகளால் வருத்தத்தை கூறினேன்..
வார்த்தையில் ஆறுதலும் தேடினேன்.
வார்த்தையில்லா கவிதை இது ..
மௌனத்தில் மொழி வாடுது !!

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (5-Feb-15, 12:55 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : vali
பார்வை : 114

மேலே