உண்மைக் காதல்
காதல் கனவை
சுமந்த வயது...!
திரும்பும் திசை எங்கும்
உன்றன் பிம்பம்...!
அரும்பு மீசையும்
குறும்புப் பார்வையும்
கூடித் திரிந்த காலம்...!
புல்தரையில் நாம்
அமர்ந்திருந்தபோது ...
மெல்லக்கடித்த எறும்பைச்
செல்லமாய்த் தட்டிவிட்டு
வெள்ளமாய்
உனைப்பார்த்த நான்...!
அந்த நாள் எங்கே?
காலக் கரையான்
அரித்து விட்டது...
காதல் மட்டும்
நிலைத்து விட்டது...!
இன்று
நீ இல்லை என்னோடு ...!
நான் மட்டும்
உன் நினைவோடு...!