மறுபடி உன்னுடன் சேர்வேனா

வழித்துணை நீ என நானிருந்தேன்
வலிகளை மறந்தே வாழ்ந்திருந்தேன் - என்
ரணங்களின் ரத்தத்தை நீ துடைத்தாய்
ரகசியமான என் மருந்தே !
பாதையில் இருவரும் சென்றிருந்தோம்
பாதியில் தனியே ஆனேனே!
மறுபடி உன்னுடன் சேர்வேனா
இருளிலும் உன் நிழல் ஆவேனா?

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (7-Feb-15, 7:53 pm)
பார்வை : 476

மேலே