தன்முகநம்பி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தன்முகநம்பி
இடம்:  THARAGAMPATTY
பிறந்த தேதி :  20-Feb-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  33

என்னைப் பற்றி...

HEADMASTER

என் படைப்புகள்
தன்முகநம்பி செய்திகள்
தன்முகநம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2015 10:51 pm

நம்பியவர் எல்லாம்
நழுவி விட்டாலும்
நயவஞ்ச கத்தனமாய்
விலகி விட்டாலும்
கவலை கொள்ளாதே - மனமே
கலங்கி நில்லாதே !
கயவரை நம்பாதே - நீயும்
காயென வெம்பாதே! (கவலை...)

உனக்கொரு காலம்
இருக்குது என்றே
உள்ளத்தை முறுக்கேற்று - அந்த
உண்மைக்கு விளக்கேற்று !
உழைபொன் றேதான்
உயர்வைக் கொடுக்கும்
என்பதை நிலைநாட்டு - நெஞ்சில்
நம்பிக்கை ஒலியூட்டு ! (கவலை...)

கலந்தனில் ஏறிக்
கடல்தனில் சென்றால்
கற்றும் வீசிடுமே - கடும்
புயலும் தாக்கிடுமே - அதுபோல்
வசந்தமும் வறட்சியும்
வந்திடும் சென்றிடும்
வாட்டம் கொள்ளாதே - வாழ்வில்
வதங்கி நில்லாதே!

மேலும்

அழாகான கவிப்பாடல் 07-May-2015 11:06 pm
தன்முகநம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 9:37 pm

கடிக்க வந்தக்
கொசுவை
அடிக்க மனமில்லை...

உன்னைத் தொட்டுவிட்டு
என்னைத்
தொட்டதால்...!

மேலும்

அருமை நண்பரே...நல்லக் கற்பனை.... 14-Mar-2015 10:54 pm
தன்முகநம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 9:16 pm

'பூ" தொடுத்தால் பூவை
ஆனால்...
சூடவில்லை பூவை!

மேலும்

தன்முகநம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 9:48 pm

முடியாது என்று நீயும்
முடங்கி விடாதே - திறமை
உனக்குள்ளே நிறைந்திருக்கு
ஒதுங்கிச் செல்லாதே - தோழா
ஒதுங்கிச் செல்லாதே ! (முடியாது...)

செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்து
செயலைச் செய்யுவாய் - நீயும்
அல்லும் பகலும் பாடுபட்டு
அறிவைத் தேடுவாய் - தோழா
அறிவைத் தேடுவாய்! (முடியாது...)

உழைப்பதனால் உள்ளம் என்றும்
கெட்டுப்போகாது நன்மை
விட்டுப் போகாது !
மலைத்து நின்றால் மடியில்வந்து
வெற்றி சேராது - தோழா
விரைந்து போராடு ! (முடியாது...)

அஞ்சிநீயும் விலகி நின்றால்
அமைதி வாராது - வாழ்வின்
சுமைகள் தீராது !
நெஞ்சில் உறுதி கொண்டி

மேலும்

மிகவும் அருமை அனைத்து வரிகளும் 02-Mar-2015 11:26 pm
தன்முகநம்பி - தன்முகநம்பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 2:20 pm

பாசம் காட்டும் விலங்கினைப்பார் - உணவைப்
பகிர்ந்தே உண்ணும் பறவையைப்பார்!
வேசம் போடும் மனிதர்களே ! - நமக்குள்
வேண்டாம் சாதி மதபேதம்!

பிறப்பிடம் வேறே என்றாலும் - நதிகள்
இணைவது எல்லாம் ஓரிடந்தான்!
பிரிவுகள் ஆயிரம் இருந்தாலும் - நாம்
இந்தியத் தாயின் பிள்ளைகள்தாம்!

மதங்கள் என்னும் போர்வையிலே - மனிதன்
மதந்தான் பிடித்தே அலைகின்றான் !
உதவும் எண்ணம் இழந்திட்டான் - நல்
உயர்வைக் காண மறந்திட்டான்!

மொழிகள் ஆயிரம் இருந்தாலும் - நமக்குள்
வேற்றுமை என்பது வேண்டாமே!
மதங்கள் பலவாய் இருந்தாலும் - நம்
மனங்கள் ஒன்றாய் இணையட்டும்!

ஒற்றுமை இன்றி ஒருநாளும் - பெரும்
உயர்வைக் காண்பது

மேலும்

//ஒற்றுமை இன்றி ஒருநாளும் - பெரும் உயர்வைக் காண்பது அரிதாமே ! பற்றினை வைத்து நம்நாட்டை - நாம் பாரில் உயர்த்த உழைப்போமே!// கவிநடை மிளிர்கிறது ! வாழ்த்துக்கள் ! 07-Feb-2015 4:58 pm
மேலும்...
கருத்துகள்

மேலே