VIP

என் பசி திர்த்த தண்ணீரும்,
இன்று விலை ஏறி போனபின்னே..

ருசிக்காக உண்ட நானும் இன்று,
பசிக்காக உண்ணுகிறேன்....!

ஊர் வரவும் ஆசையில்லை,
சொந்தம் கேட்ட கேள்விக்கும்,
பதிலும் இல்லை..

தூர தேசம் போக பணமும்மில்லை..
என் தேசத்தில
என் தாயும்,
தாய்மொழியும்,
தவிர வேறு எதுவும் அறியவும் இல்லை..

என்றாலும் கண்ணிருடன் மார்தட்டி கொள்கிறேன்,
அன்று நான் கல்லூரியில்
முதல் மாணவன் என்று....

எழுதியவர் : ர.கோவர்த்தனன் (12-Feb-15, 10:20 pm)
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே