அவள் எழுதிய காதல் கடிதம்

அவளெழு திட்டயின் காதல் கடிதமிது
நாலுவரி ஓர்வான வில்

அவளெழு திட்டயின் காதல் கடிதமிது
நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர்
கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்

நாலுவரி ஓர்வான வில்
நேர் நிரைநேர் நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய்

விளம் முன் நேர் மா முன் நிரை கொண்ட இயற்சீர் வெண்டளை
காய் முன் நேர் கொண்ட வெண்சீர் வெண்டளை
ஈற்றில் ஓரசைச் சீர்
முழு வெண்பா அமைதி பெற்ற ஈரடி குறட பா

மூன்று வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பின்னிரவில்
எழுத்துத் தளத்தில் நான் பதிந்த முதல் கவிதை இதுதான்:

இது
அவள் எழுதிய
காதல் கடிதம்
நாலு வரியில்
ஒரு வானவில் .
--இந்த புதுக் கவிதையைத் தான் குறட பாவாகத்
தந்திருக்கிறேன்
----கவின் சாரலன்
படிக்கவும் ரசிக்கவும் முயலவும் .
தொடந்து வரும்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-15, 11:28 pm)
பார்வை : 142

மேலே