பெயர் மாற்றுங்கள்

இவ்வுலகத்தினை சீரழிக்க
இதயங்களை சீர்கெடுக்க
குடும்பங்களின் நிலைகுலைக்க
கோட்பாடுகளை வழிகெடுக்க
இதமாய் இம்சையாய்
வாஞ்சையாய் வன்மாய் !

கண்ணியத்தையிழந்து
கவிழ்ந்து கிடக்கிறது காதல்
நவ நவகரீக நாற்றத்தில் புதைந்து
நலிவடைந்து வீச்சமடிகிறது!

காமப்பூக்களை சூடிக்கொள்ளவே
காதல்கொடியை நாடியோடுகிறது
காதல் காதல் காதலென்று
கலியுக கழிவில் சிக்கி மாய்கிறது!

காமமோக சாயங்களைப்பூசி
காலத்தையே கெடுக்கிறது-காதல்
கவிதைகளால் மட்டுமே
காகிதப் பூரணமாகிறது!

அழிவதில்லை -காதல்
அழிக்கப்படுகிறது
அதனால் உண்மைக் காதலும்
அமிலத்தில் மிதக்கிறது!

ஆத்மார்த்தமெல்லாம்
ஆதிகால ஆதாம் ஏவாளோடும்
எழுதியடுக்கப்பட்ட இதிகாசங்களோடும்
முடிந்துவிட்டது....

கள்ளத்தனங்களே காதலானதால்
காதலென்ற தூய்மை பொய்யானது
காலம் போகும் போக்கில்
கழிவுகளே மெய்யாகிறது... ஆகவே,,,,

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (14-Feb-15, 8:54 am)
பார்வை : 99

மேலே