இன்னும் சற்று நொடிகளில்காக்கை சிறகினிலே

சிறகடித்து பறந்து வந்து
சின்ன குயிலாய் என் மனதில் நீ
அமரும் போது..என் சிந்தனைகள்
சிறகடிக்க தொடங்கியதே..

காதல் கூட்டுக்குள் உன்னை
நான் வைத்து காகம்
அடை காப்பது போல்
உன்னை நான் காத்து..

கற்பனை கடலில் நான் குளித்து
கனவுகள் பல நான் கண்டு
காக்கையின் சிறகுக்குள் அகப்பட்ட
குஞ்சாய் நீ என்னுள் இருத்தாயடி..

என் காலம் உள்ள வரை
நீ மட்டும் மனைவியாய்
வந்து விட்டால்...நான் கண் மூடும்
வரை என் சொர்கமே நீ தானடி..

என் மனசும் உன்னை வைத்து
மனகணக்கு போடுதடி
விடையாய் வந்து நீ
விளைந்து விடு என் மனதில் நீ..

காக்கை தன் குஞ்சை காப்பது போல்
நான் உன்னை கடைசி வரை
என் கண்ணுக்குள் வைத்து
கண்டிப்பாய் காப்பேனடி....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (15-Feb-15, 10:41 am)
பார்வை : 234

மேலே