தையை கூர்ந்து கேளுங்கள்

மதியழிந்த வேளையொன்றில்
உனையிழந்து உயிர் சுமந்து - இன்று
உன் நலம்கருதி வீதியிலே
துச்சமென வீசிச் செல்கின்றாயே ....

பிழையின்றி தண்டனையும்
துணையின்றி வாழும் கொடுமையும்
அவனின்றி கருசுமந்த நாளில்
நீயும் உணர்ந்திட்ட வலிதானே பெண்ணே....

ஒரு நொடியில் உதறிவிட்டாய்
உன் பாதை நோக்கி சென்றுவிட்டாய்
உலகம் உருட்டி விளையாடும் - இனி
ஒவ்வோர் நாளும் நரகமாகும்

ஒழுக்கம் துறந்து உறவு மறந்து
ஒன்று கூடிவிட்டீர் உடற்பசிக்காக
உங்களால் உரிய வயது வருமுன்னே
பல இழிவுக்கு ஆளாகும் - வெறும்
அரைசாண் வயிற்றுப் பசிக்காக....

தவறி விழுந்த காரணத்தால்
தரமில்லா தாயாகிப் போனவர்களே
தயை கூர்ந்து சிந்தியுங்கள்
கருணை இல்லத்தை நாடுங்கள்
வேண்டாமென்றான உயிரை வீதியில் எறியாதீர்கள் .....

எழுதியவர் : யாழ்மொழி (18-Feb-15, 7:45 pm)
பார்வை : 181

மேலே