முகநூல்

நூலின் பிடியில் பறக்கும் பட்டம்,
நொடிபொழுதினில் அறுபடலாம்..!

நூலின் வாசிப்பு மறந்த நா,
காலப்போக்கில் மடிந்து விடலாம்...!

பாலில் வெம்மை கழியா போல,
பாச நூலினால் பின்னிய வலை இது,
என்றும் மரிக்காது..!

பார் எங்கும் பிரிந்து வாடும் மனங்களை,
பக்கத்தில் கொண்டு வந்து சேர்க்கும்
இறக்கையில்லா மணிப்புறா..! "முகநூல்"

எழுதியவர் : இந்திரன் (19-Feb-15, 9:41 am)
சேர்த்தது : ராஜ் இந்திரன்
Tanglish : muganool
பார்வை : 790

மேலே