தோழி வைஷ்ணவிக்கு பிறந்தநாள்

தமிழ், தமிழின் மீதான அன்பு
எழுத்து, எழுத்தில் பிறந்த படைப்பு
ரசனை, ரசனையில் சுரக்கும் களிப்பு
இதில் எதுவோ ஒன்றோ
அல்லது
இதன் கூட்டணியோ
ஏதோ ஒரு நொடியில்
அறிமுகப்படுத்தியிருக்கலாம்
எங்கள் இருவருக்கிடையேயான நட்பினை..!

வாழ்க்கை, அதன் காரணிகள்.
காரணிகளின் வேர்களான சக மனிதர்கள்.
இதில் ஏதோ ஒன்று
இதில் எவரோ ஒருவர்
விசித்திரமாக அபரிதமான
உலகச்சிக்கல்களிலுள்ள கடின
புரியாத பல புதிர்முடிச்சுகளை
புதியதாக விடை அவிழ்த்து கொண்டிருப்பார்கள்.

அவ்வகையில், சிநேகிதி இவளொரு
புரிந்த புதிரான விடையே...!
புரியவைக்கும் புதுமையான ஞானியே..!

மெளன பாறைகளை
தனிமை உளியால் வெட்டும்போதெல்லாம்
தன்னம்பிகையோடு கண்ணீர் சிந்தாமல்
மகிழ்ச்சி நுட்பத்தை செலுத்திப்பாருங்கள்
கிடைப்பது அழகான வாழ்வு சிற்பம். ..!

இது.. இந்த தத்துவம்
சொல்லாமல் சொன்னது இந்த மங்கை.

இன்று இவளின் பிறந்தநாள்..

**இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைசு..!**

கடந்ததை மறந்து.. இனி
கடக்கப்போகும் நாட்களில்
கம்பீரத்துடன் மகிழ்ச்சியுடன்
வாழ்வாங்கு வாழ்ந்து
சாதனை திலகமாய்
உச்சம் தொட்டிட வாழ்த்துகிறேன்.

வாழ்க..! நீடுழி வாழ்க..!
------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (20-Feb-15, 8:03 am)
பார்வை : 4752

மேலே